This slideshow requires JavaScript.
உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு போட்டித் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள்
பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் படைக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20 நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.
கா. சிவத்தம்பி அவர்கள் கட்டுரை “பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்” என்றும், “விவாதித்து விபரிப்பதே” அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். க. சொக்கலிங்கம் அவர்கள் “ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை” என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.
கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் “கட்டுரை கோவை” என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் “தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்” (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும்.